Friday, December 23, 2011

Tuesday, December 13, 2011




ANUSHAM WRITES :
Posted by Picasa



ANUSHAM WRITES :
Posted by Picasa

Friday, July 29, 2011

நம்ம குடும்பத்தின் “மெகா ஸ்டார்

மன்னி  நம்ம  குடும்பத்தின்   “மெகா  ஸ்டார்”எல்லாக்கலைகளையும்
நன்றாக கற்றுக்கொண்டுவிடுவாள், முயன்றால் முடியாதது உண்டோ?
என்ற தத்துவம் உள்ளவள்.வயதான  காலத்திலும் சுறு சுறு என்று
அனைவருக்கும் உதவி செய்தாள், என் குடித்தனம் மன்னியின்
கைகளால் ஆரம்பித்து வைக்கப்பட்டது,
கரக்பூரில் மல்லிகை பூவை நீளமாக ஒற்றையாக
குழாய் போல் தொடுத்து விற்பார்கள், அனைத்து
கலைகளிலும் தேர்ந்தவர்கள் என்று பெயர் எடுத்த வங்காளிகள்
பூ தொடுக்க தெரியாதவர்கள், நம்ம ஊரில் மல்லிகை தொடுப்பதை
செண்டு கட்டுவதை மன்னி அவர்களுக்கு செய்து காட்டினாள்
ஹிந்துஸ்தானி சங்கீதம் பாடற வங்காளி பெண்ணுக்கு தம்பூர் போட்டு
அசத்தினா மன்னி, “சங்கீத பூசணி” என்று நான் மன்னியை கேலி
செய்வேன், நான் மன்னியின் முன்னால் நாட்டிய அரங்கேற்றம் செய்வேன்
ஆடல் காணீரோ ஆடுவேன், மன்னிக்கு பொழுது காணலை என்னோடு
இருக்கும்போது,
மன்னிக்கு கரக்பூரில் கிடைக்கும் அரிசி வகை பிடிக்கும்
ரொம்ப நீள மணியாக இருக்கும், பொல பொலன்னு
சாதம் ரெடிஆகும்,என்ன தான் மன்னி சாம்பார் பொடி
திரிக்க கொடுத்தாலும் அந்த ஊர் மிஷினில் சோம்பு பட்டை
வாசனை போகாமல் இருப்பதால், மன்னிக்கு சாம்பார் பொடிவாசனை
சரியான மணத்தில் வராமல் மிக்சி இல்லாமல் சின்ன உலக்கையில்
இடிப்பாள், நன்னா  சமைக்கற ஆனான்னு மன்னி ஆரம்பிக்க
அதற்க்கு முன்னாடியே நான் “இன்னும்நீ கத்துக்கணும்” அதானே
என்று  முடித்துவிடுவேன், நல்ல  வெயில் கொளுத்தும்கரக்பூரில், வீட்டில்
நானும் மன்னியும் ஈரப்புடவையை வீடு முழுக்கச் சுற்றி நடுவில்
படுத்துக்கொள்வோம், தாழம்பூவிற்க்கு தனி மணம், வாடினாலும்
எப்பவோ தலையில் சூடிய தாழம்பூ  மணம் நம்மைச்சுற்றி
மணந்து கொண்டே இருக்கும், எலிசபத் ராணியை சானலில்
பார்க்கும்போது எனக்கு மன்னி மாதிரியே தோணும்,
பக்கத்து வீட்டில் பெங்காலி ப்ராமணா அசைவம் சாப்பிடுவார்கள்
,எனக்கு முதலில் ஆச்சரியமாக இருந்தது, எங்களையும் அப்படியே
நினைத்து ஒருநாள் குழம்பு கொடுக்க வந்தார்கள்,

நாங்கள் சைவத்திலும் சுத்தசைவம் என்று தெரிந்து மன்னிப்பு கேட்டார்கள்.

வேதகால ப்ராமணாள் அசைவம் சாப்பிட்டதாக சொல்வார்கள்,ராமர்அசைவம்
சாப்பிட்டதாக  வாதிடுவார்கள், ராமர் சாப்பிட்டார் கிருஷ்ணர் சாப்பிட்டா
என்பார்கள், மூக்கை பொத்திக்கொண்டே நானும் மன்னியும் பேசிக்கொள்வோம்
அவாத்தில் சமையலாச்சான்னு விசாரிக்கப்போக அவர்கள் நாங்கள் எதற்க்கு
அப்படி கேட்கிறோம்னு தெரியாமல் அவா சமையலின் வாசனை எங்களை
மயக்கறதுன்னு நினத்து குழம்பு கொடுக்கவந்தார்கள், மன்னிக்கு நான்
இதை சொல்லும்போது சிரித்து சிரித்து கண்ணில் கண்ணீரே வந்துவிட்டது,

This is written by my sister R.vijalyalakshmi.

Thursday, July 7, 2011

காலை ஏழு மணிக்கு யோகா செய்துகொண்டிருந்தபோது அம்மா போன் வந்தது .பாப்பா சித்தி 
இரவு ஒரு மணிக்கு காலமாகி விட்டார்கள் என்று. அதன் பிறகு யோகாவில் நாட்டம் செல்லவில்லை .
உடனே நானும் சாந்தியும் , பாப்பா சித்தி வீட்டிற்கு கிளம்பிவிட்டோம்..

இந்த செய்தி ஏற்கனவே எதிர்பார்த்தது என்றாலும் ,மனதிற்கு மிகவும் வருத்தத்தை கொடுத்தது
.
பாப்பா சித்தியை , சித்தி என்று அழைத்தாலும் , அவர்கள் என்னுடைய அத்தை
சாவித்ரியின் பெண்களில் ஒருவர் . என்னுடைய கிருஷ்ணமுர்த்தி சித்தப்பா ,
அத்தையின் பெண் ,கமலா வை , திருமணம் செய்ததால், நாங்கள் ,கமலா சித்தி என்று கூப்பிடுவது போல , அத்தையின் பெண்களை செல்லா பெரியம்மா, பாப்பா சித்தி , பட்டு சித்தி என்று அழைப்போம்.

பாப்பா சித்தியை சிறுவயது முதலே தெரியும் என்றாலும், ,எங்கள் அனைவருக்கும்,மிகவும் பிடித்த வர்களில் அவரும் ஒருவர் .எங்களிடம் மிகவும் சகஜமாக பழகுவார் . .அவர் பேச்சில் அன்பும் ,வாத்சல்யமும் ,
நிறைய இருக்கும் . என்னிடமும் சாந்தியிடமும்  பேசும்போது ,என் பேரன்
அனிருத் வரை, விசாரித்து,  அறிந்து கொள்வார்,அதே போல் தான் அனைவரிடமும் ..
ஏண்டா, ராமமூர்த்தி மாமா மாதிரி வருமா , என்று பேசும்போது அடிக்கடி கூறுவார்.எங்கள் சந்தோஷத்திலும், துக்கத்திலும் , தன்னை பகிர்ந்து கொண்டவர்.
என் தங்கை ரஞ்சனி , பாப்பா சித்திக்கு , மிகவும் பிடித்தமானவள்.அவள் திருமணமாகி,சென்னையில் இருந்தபோது,அவளுக்கு ஏற்பட்ட சோதனைகளுக்கு,அருமருந்தாக இருந்தாள்.
அம்மாவை , மாயவரம் ,திருவண்ணாமலை , முதலிய இடங்களுக்கு
கூட்டிசென்று காண்பித்தவர் . விமலா அம்மாவுக்கும் , சித்தியை ,மிகவும்
பிடிக்கும். 

ரொம்ப நாளாச்சே , சித்தியை பார்க்கணும்னு , போன , முதல்ல , எண்டா,
தினமும் இந்த வழியா தானே போறே, மேல வந்து எனனை பார்க்ககூடாதா என்று தான் ஆரம்பிபார்கள்.கொஞ்ச நேரம் கழித்து, சரி சித்தி போயிட்டுவரேன் , என்று சொன்னால் , இன்னும் கொஞ்ச நேரம் இரேன் ,என்ன அவசரம் , என்னிக்கோ ஒரு நாள் வரே , சித்த இருந்துட்டு போ ,என்பார்கள்
சித்திக்கு நல்ல நிர்வாக திறமை உண்டு .சித்தியை பார்த்து கொள்ள வேலைக்கு வரும் பெண்களுக்கு , தனக்கு பிடித்தமாதிரி ,வேலை செய்ய 
கற்று கொடுத்து ,களிமண்ணை ,சிறந்த மண்பானை யாக மாற்றிவிடுவார்கள் .அவர்களிடம் மிகவும் பிரியமாக இருப்பார்கள் . சாந்தி , எனனை மாதிரியே ரசமும்/ குழம்பும் நன்னா வைப்பா இவ என்று ,அவர்களை பாராட்டுவார்கள் .
சித்திக்கு முறையாக படிக்க வாய்ப்பு இருந்திருந்தால் , இன்றைக்கு  பெரிய 
நிர்வாக பதவியில் இருந்திருப்பார்

உறவினர்களிடம் மட்டுமல்ல ,அனைவரிடமும் நன்றாக பழகக்கூடியவர்
.
பாப்பா சித்தியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டியவற்றில் முக்கியமான ஒன்று , சகோதர ,சகோதரிகளிடத்தில் அவர் வைத்திருக்கும் அன்பு/பாசம் .
அதை கண் கூடாக பார்த்தல் தான் புரியும் .சண்டையே பாசமாக இருக்கும்,
பாசமே சண்டையாக இருக்கும் .அவர்கள் (குறிப்பாக கமலா சித்தியுடன் ) 
பேசுவதும், பழகுவதும் , எனக்கு ரசனையாக இருக்கும்

 பாப்பா சித்தியிடம் , எனனை கவர்ந்த குணம் , ஆளுமை . அதில் அன்பும் கண்டிப்பும் ,சரியான விகிதத்தில் கலந்து இருக்கும். . பாப்பா சித்தியின் 
அந்த குணம் நம்மை அன்பால் கட்டி போட்டு விடும்
.
சித்தப்பா, மிகவும் குறைவாக பேசுவார். ஆனால் நம்மை ரசிப்பார் .
இருவரும் மிகவும் பொருத்தமான ஜோடி .ராஜா ,வாசு, பாஸ்கர் அவர்கள் 
குடும்பத்தினர் அனைவரும்,சித்திக்கு பெருமை சேர்த்தவர்கள் .

பாப்பா சித்தியின் இழப்பு ஒரு தலைமுறை இடைவெளியை உருவாக்கும் 
என்று எனக்கு எண்ண தோன்றுகிறது .இது இந்த அவசர உலகத்தின் பாதிப்பு..
இந்த துக்கமான தருணத்தில் , என்னுடைய எண்ணங்களையே ,பாப்பா சித்திக்கு அஞ்சலியாக செலுத்துகிறேன் .

Wednesday, July 6, 2011





அந்தி மாலை ,அதிசய வண்ணங்கள் 
நீண்ட நிழல்கள் ,நெடிதுயர்ந்த முகடுகள்
மாலை இள வெயிலில் ,பசு மஞ்சளாய் ,
பளிச்சிடும் , புல் வெளிகள் .
சோகமும் சுகமாய் மாறும்
உன்னை பார்த்துக் கொண்டிருந்தால்,
இயற்கை என்னும் இளைய கன்னியே .


ஓயாது ஓடி ஓடி வேலை செய்த ஆதவனும்
உறங்குகின்றான் , இந்த பசும்புல் மெத்தையிலே
உசுப்பிவிடாதே, அவனை .
உக்கிரம் தாங்காது உனக்கு ...
ANUSHAM WRITES :
  • தாமிர தகடு போன்ற
    ,தக தக தோசை ,
    வட்டத்தின் விளிம்பு
    அனைத்தும்
    மொறு மொறுவென,

    வெண்பனி துவலையாக
    தேங்காய் துருவலில் ,
    கடுகும் ,உளுந்தும் ,மல்லியும் ,
    தாளித்த, சட்னியுடன் ,
    உடன் பிறவா,சகோதரிகளாய்,
    பக்குவமாய் அரைத்த சிகப்பு தக்காளியும் ,
    உடன் பச்சை கொத்துமல்லியும் ,

    பச்சை வாழை இலையினிலே
    அம்மா அருகினிலே ,கணக்கில்லா ,
    தோசைகளை
    ஆசையாக, சாப்பிட்ட
    அந்த இரவு வேளையிலே ,
    வந்தானே, மணி அடித்து ,
    குல்பிவாலா ,
    இனிப்பான ,திரட்டிப்பால் குல்பியுடன்
    ம்,ம்,ம்,ம்ம்....
    வாழ்கையே, இனிக்குதப்பா....